வியாழன், 10 ஜூன், 2010

இது நிலவுக் கவிதையன்று..


எங்கே உன் கவிதைகள்
எனக் கேட்ட உனக்கு
தருவதற்கென்று தற்சமயம்
நீ விரும்பும் கவிதைகளெதுவும்
கைவசமில்லை என்னிடம்..

இப்போதெல்லாம்
இயலாமையின் ஆற்றாமையின்
இருள் கவிந்தேயிருக்கும் என் கவிதைகள்
ஒருபோதுமுனக்கு உவப்பளிக்கமாட்டா..

உடைக்கப்பட்ட
என் நிலவின் துண்டுகளை
தங்கள் வீதிகளில் கண்டெடுத்தவர்களை
சேகரித்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன்
என் முகவரிக்கு..

முழுவதும் வந்து சேர்ந்த பின்
ஒருவேளை
நானுனக்குப் பரிசளிக்கக் கூடும்
நீ விரும்பியதொரு
நிலவின் கவிதையை.


0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget