செவ்வாய், 15 ஜூன், 2010

கடவுளர்கள் ஓய்வெடுக்கிறார்கள்..


.

அது 'அரக்கி'யாகி
அனேக காலமாகிவிட்டதென்பதை
அறியாமல் இன்னமும்
நீதியை 'தேவதை' என்போரே..
இப்போதேனும்
அதன் கோர முகம் கண்டீரா..?

உங்கள்
வலிய சட்டங்களின்
இண்டு இடுக்குகளுக்குள்
அதன் 'தேவதை முகம்'
புதைக்கப்பட்டு விட்டதை
இப்போதேனும் உணர்ந்தீரா..?

இனி உங்கள்
முறையீடுகளோ வேண்டுதல்களோ
தொழுகைகளோ பிரார்த்தனைகளோ
எதுவுமே செவிமடுக்கப்படாமல் போகலாம்..

காரணம்
கலிகாலமென்பது
ஒருவேளை உங்கள் கடவுளர்கள்
ஓய்வெடுக்கும் காலமாய்
இருந்தாலுமிருக்கலாம்..!
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget