குவித்து வைக்கப்பட்டிருக்கும்
மணலைச்
சிதறடித்து விளையாடும்
சிறுவர்களைப் போல
உன் பார்வையால்
சிதறடித்து விடுகிறாய்
என் கவனம் மொத்தத்தையும்..
சிதறியவற்றைச் சேகரித்து
பின் நான் கட்டும்
மணல் வீடுகளையோ
அதே சிறுவர்களின் ஆர்வத்தோடு
கலைத்துப் போடுகிறாய்
உன் புன்னகையால் மீண்டும்..
உன் செயல்கள் எதுவாயினும்
சேதமுறுவதென்னவோ
நானாகவே இருக்கிறேன்..
பா(வம்)வி நீயோ
செய்வது இன்னதென
அறியாதிருக்கிறாய் இன்னும்..!
.
.