வியாழன், 11 ஏப்ரல், 2013

என் காட்டில் அலையுமொரு வண்ணத்துப்பூச்சி


அங்கிங்கெனாதபடி
என் காடெங்கும் பறந்து திரிகிறாய்
ஒரு வண்ணத்துப் பூச்சியென..

உன் சிறகுகள்
உதிர்க்கும் வண்ணங்களில்
தன் இருளைத் தொலைத்து
மிளிர்கிறதென் காடு

நீ அமர்ந்துண்ணும்
ஒவ்வொரு துளித்தேனும்
கனிந்த எனதன்பின்
சாறென்பதை
நீ அறிந்திருக்கிறாயா?

ஒரு சிறுவனைப் போல்
ஓயாதுன்னைத் தேடியலைகிறேன்
நீ தென்படாப் பொழுதுகளில்
என் காட்டில்
நானே திக்கின்றித் தவிக்கிறேன்

முடிவற்றதென் காடு;
அவ்வாறே
உன் பறத்தலும்
என் தேடலும்..


4 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

தேடல் தொடர வாழ்த்துக்கள்...

அப்துல் காதர் சொன்னது…

கருத்துக்கு மிக்க நன்றிங்க தனபாலன்!

Robert சொன்னது…

உன் சிறகுகள்
உதிர்க்கும் வண்ணங்களில்
தன் இருளைத் தொலைத்து
மிளிர்கிறதென் காடு// அருமை நண்பா.

அப்துல் காதர் சொன்னது…

நன்றி தோழரே!

Twitter Bird Gadget