சனி, 15 ஜூன், 2013

கவிஞனைக் கொல்லும் கவிதைகள்


நானொன்று நினைக்க
என் கவிதைகள்
வேறொன்றை எழுதிச் செல்கின்றன

என் சொற்படி கேளாத
இக்கவிதைகளின் மீது
பெரும் வன்மம் கொண்டிருக்கிறேன்

இந்த இரவின் முடிவில்
நாளை அதிகாலையில்
என் கவிதைகளைக் கொன்று விடுவதெனத் தீர்மானித்து
திட்டங்களைத் தீட்டியபடி
உறங்கிப் போகிறேன்

அதிகாலையில்
என் பிணத்தின் மீது குதித்தபடி
என் கவிதைகள் அறிவிக்கின்றன
கவிஞன் இறந்து விட்டானென..



4 கருத்துரைகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
மிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

அப்துல் காதர் சொன்னது…

நன்றி அய்யா!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

அருமையான கவிவரிகள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அப்துல் காதர் சொன்னது…

நன்றிங்க ரூபன்!

Twitter Bird Gadget